ஜடேஜா போவது உறுதி.. இன்னொருவரும் போறாரு? கொத்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்
- சஞ்சு சாம்சன் வேண்டுமென்றால் ஜடேஜா, துபே, பிரேவிஸ் ஆகியோரை கொடுக்க வேண்டும் என ராஜஸ்தான் அணி கூறியது.
- அதற்கு பதிலாக ஜடேஜாவையும் சாம் கரணையும் கொடுப்பதாக சிஎஸ்கே கூறியது.
மும்பை:
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் இம்மாதம் இறுதிக்குள் வழங்க வேண்டும்.
இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் ஏலத்திற்கு முன்பே தங்களது வீரர்களை வேறு அணிக்கு மாற்றிக் கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி முயற்சி செய்து வருகிறது. ஆனால் சஞ்சு சாம்சன் வேண்டுமென்றால் தங்களுக்கு ஜடேஜா, துபே, மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் பிரேவிஸ் ஆகியோரை கொடுக்க வேண்டும் என ராஜஸ்தான் அணி கூறியது. இதற்கு சிஎஸ்கே அணி ஒப்புக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கு பதிலாக ஜடேஜாவையும் சாம் கரணையும் கொடுப்பதாக சிஎஸ்கே கூற, அதற்கு ஜடேஜாவையும் பதிரனாவையும் தருமாறு ராஜஸ்தான் கூறியது. இதனையும் சிஎஸ்கே மறுத்துள்ளது.
இதன் மூலம் சாம்சனுக்காக ஜடேஜாவை விட்டுக் கொடுக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது உறுதியாக உள்ளது. அவருடன் செல்லும் மற்றொரு வீரர் பத்திரனா, துபே ஆகியோரை கொடுக்க சிஎஸ்கே விரும்பவில்லை. அதனால் ஜடேஜாவுடன் செல்லும் சிஎஸ்கே வீரர் யார் என்பது குறித்து சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
மேலும் அணிக்காக பல வெற்றிகளை பெற்று தந்த ஜடேஜாவை விட்டுக்கொடுப்பது வருத்தமாக உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர் பெற்று கொடுத்த வெற்றி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.