கிரிக்கெட் (Cricket)
null

தொடர் மழையால் கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா- இந்தியா இடையேயான முதல் டி20 போட்டி

Published On 2025-10-29 16:57 IST   |   Update On 2025-10-29 17:03:00 IST
  • முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
  • 9.4 ஓவருக்கு 97 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடினர். அபிஷேக் 19 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து கில்- சூர்யகுமார் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

9.4 ஓவருக்கு 97 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி வருகிற 31-ந் தேதி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News