null
டேய் தகப்பா என்னடா இதெல்லாம்.. தந்தை பேட்டி குறித்து அஸ்வினின் வைரல் பதிவு
- திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்காலம் என அஸ்வின் தந்தை கூறினார்.
- ஊடகம் முன்னிலையில் எப்படி பேசுவது என்று தந்தைக்கு தெரியாது என அஸ்வின் கூறினார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது சக வீரர்கள் உள்பட ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஓய்வு அறிவித்த அஸ்வின் இன்று சென்னை வந்தடைந்தார். அஸ்வின் திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்காலம் என அவரது தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் திடீரென ஓய்வு அறிவித்தது அதிர்ச்சியாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் சிறப்பாக விளையாடிய போதும் அணியில் இடம் கிடைக்காததால் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம்.
திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்காலம். அவமானப்பட்டதால் தான் கிரிக்கெட் விளையாட்டின் உச்சத்தில் இருக்கும் போது ஓய்வை அறிவித்திருக்கலாம். போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது தனிப்பட்ட முடிவு. அதில் தலையிட முடியாது என அஸ்வின் தந்தை ரவிச்சந்திரன் கூறியிருந்தார்.
இந்நிலையில் என் அப்பா கூறியதை இவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கவில்லை என அஸ்வின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஊடகம் முன்னிலையில் எப்படி பேசுவது என்று அவருக்கு தெரியாது. டேய் டாடி என்னடா இதெல்லாம். எனது தந்தை கூறியதை பெரிதுபடுத்தாதீர்கள். எனது ஓய்வு குறித்து என் தந்தை கூறிய கருத்துக்களை ஏற்க வேண்டாம். அவரை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.