IndvsPak போட்டியால் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு!
- இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பிப்ரவரி 15ம் தேதி நடைபெறவுள்ளது.
- இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிப்ரவரி 15-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பு செய்வதாக முதலில் அறிவித்த பாகிஸ்தான், தற்போது ஐசிசியிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு சம்மதம் தெரிவித்தது.
இதையடுத்து இரு அணிகளும் திட்டமிட்டப்படி விளையாடுவது உறுதியாகி உள்ளது. இந்த போட்டியை ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை பலரும் எதிர் நோக்கி உள்ளனர்.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பிப்ரவரி 15ம் தேதி நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதால், இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
டெல்லியில் இருந்து கொழும்பு செல்ல வழக்கமாக ரூ.30,000 செலவாகும் இருவழிக் கட்டணம், தற்போது ரூ. 1 லட்சம் வரை உயர்வு. சென்னையில் இருந்து ரூ.50,000, மும்பையில் இருந்து ரூ.70,000ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.