நாங்கள் உற்சாகமாகவும், தயாராகவும் இருக்கிறோம்: பாகிஸ்தான் போட்டி குறித்து திலக் வார்மா
- உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்.
- நாங்கள் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறோம்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற நிலையில், பாகிஸ்தான் U-Turn ஆனதால் வருகிற 15-ந்தேதி திட்டமிட்டபடி கொழும்பில் போட்டி நடைபெற இருக்கிறது.
இந்த போட்டிக்காக உற்சாகமாகவும், தயாராகவும் இருக்கிறோம் என திலக் வர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து திலக் வர்மா கூறியதாவது:-
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடக்கப்போகிறது என்று ஒருநாளைக்கு முன்னர்தான் தெரியவந்துள்ளது. நாங்கள் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறோம்.
நாங்கள் அனைத்து அணிகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறோம். பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை கவனித்துக் கொண்டிருக்கிறோம். வீரர்களும், அணி ஸ்டாஃப்களும் தயார். தற்போது நாங்கள் போட்டிக்கான பகுதியில் இருக்கிறோம். திட்டங்கள் தொடங்கப்படும்.
இவ்வாறு திலக் வர்மா தெரிவித்தார்.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருதை வென்றவர் திலக் வர்மா என்பது குறிப்பிடத்தக்கது.