கிரிக்கெட் (Cricket)

4-வது டெஸ்ட்: விக்கெட் கீப்பராக களமிறங்குவாரா ரிஷப் பண்ட்? வெளியான தகவல்

Published On 2025-07-22 15:37 IST   |   Update On 2025-07-22 15:37:00 IST
  • இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
  • இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ரிஷப் பண்டுக்கு 3-வது டெஸ்டின் போது காயம் ஏற்பட்டது.

மான்செஸ்டர்:

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் 3 போட்டி முடிவில் இந்தியா 1-2 என்றகணக்கில் பின்தங்கி இருக்கிறது.

இரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் நாளை (23-ந்தேதி) தொடங்குகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ரிஷப் பண்டுக்கு 3-வது டெஸ்டின் போது காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பேட்டிங் மட்டுமே செய்தார். அவருக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இதனால் அவர் விக்கெட் கீப்பர் பேட்டராக செயல்படுவாரா அல்லது பேட்டராக மட்டும் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில் அவர் விக்கெட் கீப்பர் பேட்டராக களமிறங்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News