விளையாட்டு
சர்வதேச குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு தகுதி
பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் தனது முதலாவது சுற்றில் இந்திய வீராங்கனை நித்து 5-0 என்ற கணக்கில் ரஷியாவின் சும்காலாகோவா இலியாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
புதுடெல்லி:
73-வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் தனது முதலாவது சுற்றில் இந்திய வீராங்கனை நித்து 5-0 என்ற கணக்கில் ரஷியாவின் சும்காலாகோவா இலியாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அனாமிகா 4-1 என்ற கணக்கில் பல்கேரியாவின் சுகனோவா ஸ்லாடிஸ்லாவாவை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். 54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஷிக்ஷா 0-5 என்ற கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான கஜகஸ்தானின் டினா ஜோல்மனிடம் வீழ்ந்தார்.
67 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஆகாஷ் 0-5 என்ற கணக்கில் ஜெர்மனியின் டேனியல் கிரோட்டரிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.