விளையாட்டு
தமிழக ரஞ்சி அணி

தமிழக ரஞ்சி அணியின் பயிற்சி 31-ந் தேதி தொடக்கம் - வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2022-01-29 04:51 GMT   |   Update On 2022-01-29 06:07 GMT
ரஞ்சி டிராபி போட்டிக்கான தமிழக அணியின் பயிற்சி முகாம் வருகிற 31-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
சென்னை:

கொரோனா பரவலால் ரஞ்சி கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது பாதிப்பு ஓரளவு குறைந்து வருவதால் போட்டியை 2 கட்டங்களாக நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி முதல் கட்டமாக லீக் ஆட்டங்கள் பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்குகிறது. நாக் அவுட் போட்டிகள் ஐ.பி.எல். முடிந்த பிறகு ஜூன் மாதத்தில் தொடங்குகிறது.

ரஞ்சி டிராபி போட்டிக்கான தமிழக அணியின் பயிற்சி முகாம் வருகிற 31-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. தமிழக வீரர்கள் வருகிற திங்கட் கிழமை சென்னையில் கூடுகிறார்கள்.

பயிற்சி முகாமில் பங்கேற்பதற்கு முன்பு அனைத்து வீரர்களுக்கும் கொரோனாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரி சோதனை செய்யப்படும். விஜய் சங்கர் தலைமையில் தமிழக அணிக்கு 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News