செய்திகள்
கோப்புப்படம்

மூன்று பேருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட தென்ஆப்பிரிக்கா கால்பந்து அணி

Published On 2021-07-18 12:33 GMT   |   Update On 2021-07-18 12:33 GMT
ஜப்பான் சென்றுள்ள தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் இருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், மற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டோக்கிய ஒலிம்பிக் போட்டிகள் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 23-ந்தேதி) தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள இருக்கும் வீரர்கள் டோக்கியோவின் ஒலிம்பிக் கிராமம் சென்ற வண்ணம் உள்ளனர்.

தென்ஆப்பிரிக்காவின் 23 வயதிற்கு உட்பட கால்ந்து அணி ஜப்பான் சென்றடைந்துள்ளது. அணியில் உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் வீடியோ அனலிஸ்ட் ஸ்டாஃப் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News