செய்திகள்
ஷபாலி வர்மா, ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா

ஹண்ட்ரட் தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா விளையாடுகிறார்கள்

Published On 2021-05-10 10:18 GMT   |   Update On 2021-05-10 10:18 GMT
இந்திய வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா உள்ளிட்ட ஐந்து வீராங்கனைகள் ஹண்ட்ரட் தொடரில் விளையாட இருக்கிறார்கள்.
இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஹண்ட்ரட் (ஒரு இன்னிங்ஸ்க்கு 100 பந்துகள்) என்ற தொடரை அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு தடைகளை தாண்டி இந்த வருடம் கோடைக்காலத்தில் முதல் தொடர் நடைபெற இருக்கிறது.

இந்த தொடரில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா உள்ளிட்ட ஐந்து பேர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

ஹர்மன்ப்ரீத் கவுர் மான்செஸ்டர் ஒரிஜனல்ஸ் அணிக்காகவும், ஸ்மிரி மந்தனா சவுத்தன் பிரேவ் அணிக்காகவும், ஷபாலி வர்மா பர்மிங்காமல் போனிக்ஸ் அணிக்காகவும் விளையாட இருக்கிறார்கள். ஹண்ட்ரட் தொடரில் விளையாடுவதற்காக பிசிசிஐ தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேற்கொண்ட மூன்று பேரைத் தவிர தீப்தி ஷர்மா, ஜெர்மையா ரோட்ரிக்ஸ் ஆகியோரும் விளையாடுகிறார்கள்.
Tags:    

Similar News