செய்திகள்
ரோகித் சர்மா

ஆஸ்திரேலியா தொடர் - ரோகித் சர்மா உடல் தகுதி குறித்து 11-ந் தேதி முடிவு

Published On 2020-11-27 06:43 GMT   |   Update On 2020-11-27 06:43 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ரோகித் சர்மாவின் உடல் தகுதி குறித்து டிசம்பர் 11-ந் தேதி மீண்டும் ஆய்வு செய்யப்படுகிறது.

புதுடெல்லி:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இருவரும் காயத்தால், உடல் தகுதி பெறவில்லை. இதனால் அவர்கள் இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லவில்லை.

இஷாந்த் சர்மாவுக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டியின் தொடக்கத்திலேயே விலகினார். ரோகித் சர்மாவுக்கு இடது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐ.பி.எல்.லில் சில ஆட்டங்கள் விளையாடவில்லை. ஆனால் இறுதிப்போட்டியில் விளையாடி கோப்பையை வென்று கொடுத்தார்.

இருவரது உடல் தகுதியும், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் கண்காணிக்கப்பட்டது. முழுமையாக உடல் தகுதி பெறாததால், முதல் 2 டெஸ்டில் இருவரும் ஆடமாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து இஷாந்த் சர்மா முற்றிலும் விலகி உள்ளார். அவர் உடல் தகுதி மற்றும் தனிமை காலத்தை பெறுவதற்கான வாய்ப்பு இல்லாததால், டெஸ்ட் தொடர் முழுவதும் விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கடடுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ரோகித் சர்மாவின் உடல் தகுதி குறித்து டிசம்பர் 11-ந் தேதி மீண்டும் ஆய்வு செய்யப்படுகிறது. உடல் தகுதி பெறாவிட்டால் அவர் ஆஸ்திரேலியா செல்லமாட்டார்.

Tags:    

Similar News