செய்திகள்
ரபடா

ஐபிஎல் தொடரை வென்று ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்றாலும் கவலைப்பட மாட்டேன்- ரபடா

Published On 2020-11-09 14:36 GMT   |   Update On 2020-11-09 14:36 GMT
விக்கெட் வீழ்த்துவது பெரிய விசயம் அல்ல, தொடரை வெல்வதுதான் முக்கியம் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர பவுலர் ரபடா தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக ரபடா உள்ளார். லீக் ஆட்டத்தில் கடைசி சில போட்டிகளில் விக்கெட் வீழ்த்த திணறிய ரபடா, குவாலிபையர் 2-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக நான்கு விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் இத்தொடரில் 29 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். அணி வெற்றி பெற்று, விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்றாலும் கவலை இல்லை என ரபடா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரபடா கூறுகையில் ‘‘ஐதராபாத் அணிக்கெதிராக குறிப்பாக கடைசி ஓவரை சிறப்பாக வீசுவேன் என்று நினைக்கவில்லை. சிறப்பாக பந்து வீசும்போது இதுபோன்று அமையும். இதற்காக அவார்டை எதிர்பார்க்கக் கூடாது. நான் இப்படித்தான் எடுத்துக் கொள்வேன். தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம். மற்றதெல்லாம் 2-வதுதான். 

நாங்கள் தொடரை கைப்பற்றினால், நான் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்றாலும் கவலைப்பட மாட்டேன். மிக நீண்ட தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினம். நாங்கள் முக்கியமான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இறுதிப் போட்டியில் சிறப்பாக அல்லது சிறந்த முறையில் விளையாடுவோம்’’ என்றார்.
Tags:    

Similar News