செய்திகள்
டி வில்லியர்ஸ், விராட் கோலி

டி வில்லயர்ஸ் மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்: விராட் கோலி புகழாரம்

Published On 2020-10-13 10:29 GMT   |   Update On 2020-10-13 10:29 GMT
மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் திணறிய நிலையில், ருத்ர தாண்டவம் ஆடிய டி வில்லியர்ஸ் மனித சக்திக்கு அப்பாற்பட்டவர் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்.சி.பி. அணியின் வெற்றிக்கு டி வில்லியர்ஸின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.

விராட் கோலி 28 பந்தில் 33 ரன்களே அடித்த நிலையில், டி வில்லியர்ஸ் 33 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 73 ரன்கள் விளாசினார்.

இந்நிலையில் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் திணறிய நிலையில், டி வில்லியர்ஸ் மட்டும் அபாரமாக விளையாடினார். அவர் மனித சக்திக்க அப்பாற்பட்டவர் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இந்த ஆடுகளம் டிரையராக இருந்தது. 2-வது பந்து வீசும்போது பனி இருக்காது என்று நினைத்தோம். மனித சக்திற்கு அப்பாற்பட்ட டி வில்லியர்ஸைத் தவிர மற்ற பேட்ஸ்மேனகள் போராடினர். 165 ரன்கள் வருமா? என்று பேசிக் கொண்டிருக்கும்போது, 194 ரன்கள் வந்ததற்கு காரணம் யார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரது ஆட்டம் நம்ப முடியாதது’’ என்றார்.
Tags:    

Similar News