செய்திகள்
ஷேன் வார்னே, சஞ்சு சாம்சன்

இந்திய அணியில் சஞ்சு சாம்சனை சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது வார்னே சொல்கிறார்

Published On 2020-09-27 09:58 GMT   |   Update On 2020-09-27 09:58 GMT
மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது என வார்னே தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் வார்னே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக உள்ளார். சென்னை அணிக்கு எதிராக அபாரமாக ஆடிய ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சனை அவர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக வார்னே கூறியதாவது:-

சஞ்சு சாம்சன் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அவரை இந்திய அணியில் 3 வடிவிலான போட்டிகளிலும் சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆட்ட ஸ்டைல் அபாரமாக இருக்கிறது. அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணிக்கு ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

அறிமுக ஐ.பி.எல் போட்டியில் (2008) வார்னர் தலைமையில் ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News