செய்திகள்
ரோகித் சர்மா

ஹிட்மேனுக்கு கைவிரலில் காயம்: நாளைய போட்டியில் களம் இறங்குவாரா?

Published On 2020-01-13 13:50 IST   |   Update On 2020-01-13 15:31:00 IST
பயிற்சியின்போது பெருவிரலில் காயம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளைய வான்கடே ஒருநாள் போட்டியில் களம் இறங்குவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.
மும்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நாளை மோத உள்ள நிலையில் திடீர் பின்னடைவாக துணை கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்துள்ளார்.

நேற்று பயிற்சியின்போது பந்து தாக்கியதில் வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் விரலில் ‘பேண்டேஜ்’ போட்டுவிட்டார். இதனால் தொடக்க ஆட்டத்தில் ரோகித் சர்மா ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Similar News