செய்திகள்
புரோ கபடி லீக் - பரபரப்பான ஆட்டத்தில் பெங்காலை வீழ்த்தியது அரியானா
புரோ கபடி லீக் போட்டியில் டெல்லியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தின் பரபரப்பான கடைசி கட்டத்தில் பெங்கால் அணியை 35 -33 என்ற கணக்கில் வீழ்த்தி அரியானா அணி வெற்றி பெற்றது. #ProKabaddi #HaryanaSteelers #BengalWarriors
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 19 - 12 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா அணி முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் இறுதி வரை இரு அணி வீரர்களும் சளைக்காமல் ஆடினர். கடைசி கட்டம் வரை ஆட்டம் பரபரப்பாக சென்றது.
இறுதியில், ஆட்டம் முடியும் கடைசி நிமிடத்தில் அரியானா அணி வீரர்கள் அபாரமாக ஆடி பாய்ண்ட் எடுத்தனர். இதனால் அரியானா அணி 35 - 33 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் அரியானா அணி ஆறாவது வெற்றியை பெற்றது. #ProKabaddi #HaryanaSteelers #BengalWarriors