செய்திகள்

ரஞ்சி டிராபி- டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து கவுதம் காம்பிர் விலகல்

Published On 2018-11-05 10:05 GMT   |   Update On 2018-11-05 10:05 GMT
ரஞ்சி டிராபிக்கான டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து கவுதம் காம்பிர் விலகியுள்ளார். ராணா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #RanjiTrophy
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 12-ந்தேதி இமாச்சல பிரதேசம் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் 37 வயதாகும் காம்பிர், இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனால் 24 வயதான நிதிஷ் ராணா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ராணா 24 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Tags:    

Similar News