செய்திகள்
டிஎன்பிஎல் 2018- சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கோவை கிங்ஸ்
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கோவை கிங்ஸ். #TNPL2018 #CSGvKK
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 16-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு எதிராக கோவை கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி கோவை கிங்ஸ் அணியின் ஷாருக் கான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அபிநவ் முகுந்த் 35 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். ஷாருக் கான் 45 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அந்தோணி தாஸ் 21 பந்தில் 28 ரன்கள் சேர்க்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் பி அருண், ஹரிஸ் குமார் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சேஸிங் செய்து வருகிறது.
அதன்படி கோவை கிங்ஸ் அணியின் ஷாருக் கான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அபிநவ் முகுந்த் 35 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். ஷாருக் கான் 45 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அந்தோணி தாஸ் 21 பந்தில் 28 ரன்கள் சேர்க்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் பி அருண், ஹரிஸ் குமார் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சேஸிங் செய்து வருகிறது.