செய்திகள்
பவர்பிளேயில் 2015 உலகக்கோப்பைக்குப் பின் மிகவும் மோசமான ஸ்கோர் இதுதான்
இங்கிலாந்திற்கு எதிரான இன்றைய போட்டியில் முதல் 10 ஓவரில் இந்தியா 32 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் குறைந்த ஸ்கோரை பதிவு செய்துள்ளது. #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது. ரோகித் சர்மா, தவான் வழக்கமான அதிரடிக்குப் பதிலாக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மந்தமான நிலையில் உயர்ந்தது.
இந்தியாவின் 5.4 ஓவரில் 13 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளை சந்தித்து 2 ரன்களே எடுத்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.
இந்தியா முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களே எடுத்தது. இதன்மூலம் கடந்த 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு தற்போதுதான் பவர் பிளேயில் மிகவும் குறைவான ரன்களை சேர்த்துள்ளது.
இதற்கு முன் தரம்சாலாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்ததே குறைவான ஸ்கோராக இருந்தது.
அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது. ரோகித் சர்மா, தவான் வழக்கமான அதிரடிக்குப் பதிலாக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மந்தமான நிலையில் உயர்ந்தது.
இந்தியாவின் 5.4 ஓவரில் 13 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளை சந்தித்து 2 ரன்களே எடுத்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.
இந்தியா முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களே எடுத்தது. இதன்மூலம் கடந்த 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு தற்போதுதான் பவர் பிளேயில் மிகவும் குறைவான ரன்களை சேர்த்துள்ளது.
இதற்கு முன் தரம்சாலாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்ததே குறைவான ஸ்கோராக இருந்தது.