செய்திகள்

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்- பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2018-07-05 15:29 IST   |   Update On 2018-07-05 15:29:00 IST
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்து 2-வது சுற்றில் அயா ஒஹோரியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். #PVSindhu
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் உள்ள ஜகர்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பிவி சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை எதிர்கொண்டார்.

இன்றுடன் 23-வது வயதை நிறைவு செய்யும் பிவி சிந்து, பிறந்த நாள் அன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினார். அவர் நினைத்தபடியே 2-வது சுற்று எளிதாக அமைந்தது. முதல் செட்டை 21-17 எனவும், 2-வது செட்டை 21-14 எனவும் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.



இந்த வெற்றியின் மூலம் அயா ஒஹோரியை 5-வது முறையாக பிவி சிந்து வீழ்த்தியுள்ளார். இந்த வெற்றியை பெற பிவி சிந்துவிற்கு 36 நிமிடங்களே தேவைப்பட்டது.
Tags:    

Similar News