செய்திகள்
ஐபிஎல் 2018 - கொல்கத்தாவுக்கு 211 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை
கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை அணி. #IPL2018 #KKRvMI
ஐபிஎல் தொடரின் 41-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், கிறிஸ் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். யாதவ் 36 ரன்னிலும், லெவிஸ் 18 ரன்னிலும், ரோகித் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.
விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அவரை தொடர்ந்து இறுதியில் ஆடிய பென் கட்டிங் 9 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்.
இதனால் மும்பை அண் இ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் பியுஷ் சாவ்லா 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, கொல்கத்தா அணி 211 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.
#IPL2018 #KKRvMI