செய்திகள்

ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்சிக்கு ரூ.2.5 கோடி பரிசு: அரியானா அரசு அறிவிப்பு

Published On 2016-08-18 11:33 IST   |   Update On 2016-08-18 11:33:00 IST
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்சிக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது
ஒலிம்பிக்கில் அரியானா மாநிலத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் தங்கம் வென்றால் ரூ.6 கோடியும், வெள்ளி வென்றால் ரூ.4 கோடியும், வெண்கலத்துக்கு ரூ.2 கோடியும் பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்ததது. மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற அரியானாவை சேர்ந்த சாக்சி மாலிக்குக்கு ரூ.2.5 கோடி பரிசை அறியானா அரசு அறிவித்துள்ளது.

மேலும் அவருக்கு அரசு வேலையும், நிலமும் வழங்கப்படுகிறது. இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ.20 லட்சமும் பரிசு தொகை அறிவித்துள்ளது.

Similar News