புதுச்சேரி

புதுச்சேரியில் புதிய கட்சியை தொடங்கினார் தொழிலதிபர் மார்ட்டினின் மகன்

Published On 2025-12-14 10:03 IST   |   Update On 2025-12-14 10:13:00 IST
  • புதுச்சேரி அரசியலில் களமிறங்க நீண்டநாட்களாக ஆர்வம் காட்டி வந்தவர் சார்லஸ் மார்ட்டின்
  • லட்சிய ஜனநாயக கட்சி கட்சி என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார்.

தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி, கொடியையும் அறிமுகம் செய்தார்

நீலம், வெள்ளை, சிவப்பு நிறத்தில் கையில் வேலேந்திய சிங்கம், 6 நட்சத்திரங்கள், நெற்கதிருடன் LJK என பதிக்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டது

கட்சியின் கொடிக்கு மும்மத பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அங்காளன், சிவசங்கரன், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் விஜய் களமிறங்கிய அதேபாணியில், புதுச்சேரி அரசியலில் களமிறங்க நீண்டநாட்களாக ஆர்வம் காட்டி வந்தவர் சார்லஸ் மார்ட்டின். இதற்காக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். ஜேசிஎம் மக்கள் மன்றம் பெயரில் நலத்திட்ட உதவிகள் சில செய்தாலும், பாஜக எம்எல்ஏக்களோடு கூடுதல் நெருக்கம் காட்டி வந்தார்.

இதனால் பாஜக சார்பில் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், லட்சிய ஜனநாயக கட்சி கட்சி என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார்.

தற்போது புதிய கட்சியை தொடங்கியுள்ள சார்லஸ் மார்ட்டின், அடுத்தாண்டு நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News