புதுச்சேரி

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Published On 2025-11-14 11:27 IST   |   Update On 2025-11-14 11:27:00 IST
  • விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • பள்ளிகள் அடுத்த ஆண்டு ஜன. 3ம் தேதி வேலைநாளாக செயல்படும்.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால் புதுச்சேரியில் நாளை (15.11.25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்து.

டெட் தேர்வு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

நாளைய விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த ஆண்டு ஜன. 3ம் தேதி வேலைநாளாக செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News