புதுச்சேரி

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோவில் கைது

Published On 2025-04-11 12:20 IST   |   Update On 2025-04-11 12:20:00 IST
  • போலீசார் சிறுமியிடம் நடந்தவற்றை வாக்குமூலமாக வீடியோவில் பதிவு செய்தனர்.
  • சிறுமியின் தந்தையை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

புதுச்சேரி:

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு புதுவை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாஸ்பேட்டை மெயின் ரோடு பிள்ளையார்கோவில் அருகே நள்ளிரவில் 17வயது சிறுமி ஒருவர் தனியாக வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

இதைக்கண்ட இன்ஸ்பெக்டர் சாந்தி தனது வாகனத்தை நிறுத்தி சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது சிறுமி அதிர்ச்சிகரமான தகவலை கூறினார்.

அந்த சிறுமி பிளஸ்-2 படித்து வருவதாகவும், விடுமுறை முடிந்து வீட்டில் இருந்து வந்த அவருக்கு அவரது தந்தை கடந்த 10 நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்தார். இதனால் புகார் அளிக்க லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு நள்ளிரவில் நடத்து வந்ததாக தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் சாந்தி பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு தனியார் காப்பகத்தில் இரவு தங்க வைத்தார்.

நேற்று காலை இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சிறுமியிடம் நடந்தவற்றை வாக்குமூலமாக வீடியோவில் பதிவு செய்தனர்.

பின்னர் சிறுமியின் தந்தையை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மகள் என்றும் பாராமல் அவர் 10 நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News