இந்தியா
கேரளாவில் வேன் கவிழ்ந்து விபத்து- தமிழகத்தை சேர்ந்த இருவர் பலி
- தனியார் நிறுவன ஊழியர்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர்.
- 2 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
அடிமாலி மாங்குளம் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த மீட்டு குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அடிமாலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், நெல்லையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர்.