இந்தியா

தனியார் பயிற்சி மையங்களுக்கு புதிய கட்டுப்பாடு- மத்திய கல்வி அமைச்சகம்

Published On 2024-01-20 14:09 GMT   |   Update On 2024-01-20 14:09 GMT
  • பயிற்சி நிறுவனங்கள் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களைச் சேர்க்க கூடாது.
  • நல்ல மதிப்பெண்களுக்கான உத்தரவாதத்தை பெற்றோருக்கு அளிக்க கூடாது.

தனியார் பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எந்த ஒரு பயிற்சி மையமும் பட்டப்படிப்பை விட குறைவான தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது. பயிற்சி நிறுவனங்கள் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களைச் சேர்க்க கூடாது.

மாணவர்களைச் சேர்ப்பதற்காக பயிற்சி நிறுவனங்கள் தவறான வாக்குறுதிகளை அளிக்கவோ, ரேங்க் அல்லது நல்ல மதிப்பெண்களுக்கான உத்தரவாதத்தை பெற்றோருக்கு அளிக்கவோ கூடாது.

பயிற்சியின் தரம், வழங்கப்படும் வசதிகள், பயிற்சி மையத்தால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் தொடர்பான எந்தவொரு தவறான விளம்பரத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளியிடக் கூடாது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News