இந்தியா

லண்டன் புறப்பட்ட விமானம் விபத்து: குஜராத் முதல்வருடன் பேசிய அமித் ஷா..!

Published On 2025-06-12 14:36 IST   |   Update On 2025-06-12 14:43:00 IST
  • ஏர் இந்தியாவின் AI 171 விமானம் விபத்துக்குள்ளானது.
  • 242 பேர் பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு இன்று மதியம் 1.17 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் AI 171 விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். அவர்களின் நிலை என்ன? என்பது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. பல உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் மாநிலம் முதல்வர் மற்றும் போலீஸ் துறை அமைச்சரிடம் பேசியுள்ளார். அப்போது மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

Tags:    

Similar News