சஞ்சய் ராவத்
சிவசேனா கூட்டணி 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் - சஞ்சய் ராவத் உறுதி
- சிவசேனா பால் தாக்கரேவுக்குச் சொந்தமானது என்றார் சஞ்சய் ராவத்.
- பணத்தின் மூலம் கட்சியை யாரும் விலைக்கு வாங்க முடியாது என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரியாகவும், பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல் மந்திரியாகவும் பதவியேற்றனர். கடந்த 4-ம் தேதி நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிவசேனா 100 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று உறுதியுடன் உள்ளோம். இடைத்தேர்தல் வரட்டும், யார் ஜெயிப்பார்கள், யார் தோற்பார்கள் என்பது எல்லாம் தெளிவாகும் என உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.
சிவசேனா பால் தாக்கரேவுக்குச் சொந்தமானது. வேறு யாருடையதாகவும் இருக்கமுடியாது. பணத்தின் மூலம் கட்சியை விலைக்கு வாங்க முடியாது.
பணம் மட்டுமல்லாது வேறு ஏதாவது கொடுக்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இந்த ஏதாவது வெளிப்படும் போது தெரியவரும்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்பி வருவார்கள் என நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் எங்கள் கட்சியினர், மீண்டும் வருவார்கள் என தெரிவித்தார்.