ஐதராபாத்தில் பெண் டி.வி. தொகுப்பாளர் தற்கொலை- போலீசார் விசாரணை
- பெற்றோரை பிரிந்து காதலன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுக் தேவ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜவகர் நகர் ஆர்.டி.சி கிராஸ் சாலையை சேர்ந்தவர் சுக்தேவ் வோடர்கர் (வயது 40). இவர் பிரபல தெலுங்கு டி.வி.யில் தொகுப்பாளராக வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்தார். பார்சிகுடா, ஒய்.எஸ்.ஆர் பூங்கா அருகே தனது பெற்றோர் மற்றும் 14 வயது மகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சுக்தேவிற்கு மற்றொரு நபருடன் காதல் ஏற்பட்டது. இதனால் பெற்றோரை பிரிந்து காதலன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
நேற்று காலை தன்னுடன் வசித்து வந்த காதலனுடன் சுக்தேவுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவரது காதலன் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார்.
நேற்று இரவு வீட்டு படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சுக்தேவ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது மகள் இது குறித்து தனது தாத்தா, பாட்டிக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் சிக்கட்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுக் தேவ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.