இந்தியா

மணிப்பூரில் மர்ம பொருள் பறந்ததால் பரபரப்பு

Published On 2023-11-20 08:45 GMT   |   Update On 2023-11-20 09:31 GMT
  • மர்ம பொருளால் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது.
  • விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலாவில் விமான நிலையம் அருகே விமான கட்டுப்பாட்டில் உள்ள வான்வெளியில் அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று திடீரென பறந்தது.

பிற்பகல் 2 மணியளவில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம பொருளால் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 3 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

ரேடார் பதிவுகள், சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து மர்ம பொருளை கண்டறியும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News