இந்தியா

ஆந்திராவில் அரசியல் போட்டியால் ஆசிரியர் கொலை

Published On 2023-07-18 04:25 GMT   |   Update On 2023-07-18 08:50 GMT
  • கிருஷ்ணா கொலை செய்யப்பட்டது குறித்து அவர்களது ஊர் முழுவதும் தகவல் பரவியது.
  • வெங்கட நாயுடு மற்றும் கூலிப்படையினரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், வெல்கம் மண்டலம் ஊட்டவோலுவை சேர்ந்தவர் கிருஷ்ணா.அங்குள்ள உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கட நாயுடு. இருவரும் ஒரே அரசியல் கட்சியில் நிர்வாகிகளாக இருந்து வந்தனர்.

மேலும் வெங்கட நாயுடு அரசு கட்டிடங்களை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். தனது அரசியல் வளர்ச்சிக்கு கிருஷ்ணா இடையூறாக இருப்பதாக வெங்கட நாயுடு எண்ணினார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் தனது பைக்கில் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை காரில் பின் தொடர்ந்து சென்ற வெங்கட நாயுடு மற்றும் கூலிப்படையினர் உங்களது காரில் கிருஷ்ணாவின் பைக் மீது மோதினர். இதில் கிருஷ்ணா நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.

அப்போது தாங்கள் கொண்டு வந்த இரும்பு ராடால் கிருஷ்ணாவை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கிருஷ்ணா கொலை செய்யப்பட்டது குறித்து அவர்களது ஊர் முழுவதும் தகவல் பரவியது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வெங்கட நாயுடுவின் வீட்டின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கட நாயுடுவின் குடும்பத்தினரை பின்பக்க வாசல் வழியாக பத்திரமாக மீட்டு சென்றனர்.

வெங்கட நாயுடு மற்றும் கூலிப்படையினரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News