'கேரளா இந்திய வரைபடத்தில் இருப்பதை மத்திய அரசு மறந்துவிட்டது' - பினராயி விஜயன்

மத்திய அரசின் தொடர்ச்சியான பாகுபாடு மற்றும் கேரள மீதான புறக்கணிப்பை அம்பலப்படுத்துகிறதுகேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்தப் புறக்கணிப்பு குறித்துப் பதிலளிக்க வேண்டும்
'கேரளா இந்திய வரைபடத்தில் இருப்பதை மத்திய அரசு மறந்துவிட்டது' - பினராயி விஜயன்
Published on

2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, மத்திய அரசின் தொடர்ச்சியான பாகுபாடு மற்றும் கேரள மீதான புறக்கணிப்பை அம்பலப்படுத்துகிறது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவும் இந்தியாவின் வரைபடத்தில் இருப்பதை நிர்மலா சீதாராமன் மறந்துவிட்டதாகவும், வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் "கேரளாவின் நீண்ட கால கோரிக்கைகளான எய்ம்ஸ் மருத்துவமனை, 7 அதிவேக ரயில் வழித்தடங்கள் மற்றும் விழிஞ்சம் துறைமுகத்திற்கான சிறப்புத் தொகுப்புத் திட்டம் ஆகியவை முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன" என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 41 சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது கூட்டாட்சித் தத்துவத்தைச் சீர்குலைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், சாதாரண மக்களை வறுமையில் தள்ளும் வகையிலும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்தப் புறக்கணிப்பு குறித்துப் பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com