இந்தியா
null

மத்திய பட்ஜெட் எதிரொலி: நிலைகுலைந்த பங்குச்சந்தை - சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!

Published On 2026-02-01 15:25 IST   |   Update On 2026-02-01 15:33:00 IST
  • எதிர்கால ஒப்பந்தங்கள் மீதான வரி 0.02%-லிருந்து 0.05%-ஆகவும், ஆப்ஷன்ஸ் மீதான வரி 0.15%-ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.
  • பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறையாகும்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பின் ஞாயிற்றுக்கிழமையான இன்று மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இந்நிலையில் இன்று இந்தியப் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறையாகும். ஆனால் பட்ஜெட்டை ஒட்டி இன்று பங்குச்சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் பிற்பகலுக்கு பின் நடைபெற்ற வர்த்தகத்தின் போது, மும்பை பங்குச்சந்தையின் 30 முக்கிய பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் முன்னணி 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 500 புள்ளிகளுக்கு மேல் சரிவைக் கண்டது.

பட்ஜெட் உரை முடிந்தவுடன் தற்போது சென்செக்ஸ் 1546 புள்ளிகள் சரிவுடனும், நிஃப்டி 495 புள்ளிகள் சரிவுடனும் வர்த்தகம் முடிந்தது. இந்த சரிவிற்கு காரணம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பங்குச்சந்தை பரிவர்த்தனை வரி. பங்குகள் பரிவர்த்தனை வரியை உயர்த்தி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டநிலையில்  இந்த சரிவு நிகழ்ந்துள்ளது. இதன்படி, எதிர்கால ஒப்பந்தங்கள் மீதான வரி 0.02%-லிருந்து 0.05%-ஆகவும், ஆப்ஷன்ஸ் மீதான வரி 0.15%-ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.


Tags:    

Similar News