Union Budget 2026: பாதுகாப்பு துறைக்கு 15 சதவீதம் அதிக நிதி ஒதுக்கீடு!
- ராணுவ ஓய்வூதியத் திட்டங்களுக்காக ரூ.1,71,338 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.
- விமான உதிரிபாகங்களுக்கான அடிப்படை சுங்கவரியில் இருந்து விலக்கு.
2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ. 7.8 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கடந்த பாதுகாப்பு துறைகான நிதி கடந்த ஆண்டை விட 15% அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நடப்பு பட்ஜெட்டில், ராணுவத் தளவாடங்களை நவீனப்படுத்த ரூ.2.19 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் ரூ.1.80 லட்சம் கோடியை விட 21.84% அதிகமாகும்.
ராணுவப் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்ட அன்றாடச் செலவுகளுக்கு ரூ.3,65,478 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ராணுவ ஓய்வூதியத் திட்டங்களுக்காக ரூ.1,71,338 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் இறக்குமதி செய்யப்படும் விமான உதிரிபாகங்களுக்கான அடிப்படை சுங்கவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மேலும், ரஃபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த நிதியாண்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை எட்டவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் இந்த பட்ஜெட் பெரும் உந்துதலாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தானுடன் மோதல் ஆகியவற்றால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டு பாதுகாப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.