இந்தியா

தெலுங்கானாவுக்கு வந்த அரிய வகை பறவை

Published On 2024-01-02 05:37 GMT   |   Update On 2024-01-02 05:37 GMT
  • வட இந்திய மாநிலங்களிலும் இந்த பறவை இனங்கள் வர தொடங்கியுள்ளன.
  • குளிர்காலம் என்பதால் இறைதேடி தெலுங்கானா மாநிலத்திற்கு வந்துள்ளன.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் மோமின் பேட்டை மண்டலத்தில் உள்ள வனப்பகுதியில் அரிய வகை பறவை ஒன்று தென்பட்டது.

இந்த பறவை மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் வாழக்கூடியதாகவும். தற்போது வட இந்திய மாநிலங்களிலும் இந்த பறவை இனங்கள் வர தொடங்கியுள்ளன.

தற்போது குளிர்காலம் என்பதால் இறைதேடி தெலுங்கானா மாநிலத்திற்கு வந்துள்ளன. கடந்த 2023-ம் ஆண்டில் தெலுங்கானாவில் காணப்பட்ட பறவைகளின் பட்டியலில் இது இடம்பெற்றுள்ளது.

Tags:    

Similar News