இந்தியா

விமர்சனங்கள் குறித்து சிந்திக்கவே இல்லை- சந்திரபாபு நாயுடுவிடம் ரஜினி பேச்சு

Published On 2023-05-03 08:48 GMT   |   Update On 2023-05-03 12:03 GMT
  • சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசினார்.
  • ரஜினி காந்த்தை அமைச்சர் ரோஜா, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், மறைந்த நடிகருமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு தொடக்க விழா விஜயவாடாவில் கடந்த வாரம் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசினார். இதனால் ரஜினி காந்த்தை அமைச்சர் ரோஜா, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்தனர்.

இதற்கு சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்தார். ரஜினியை விமர்சிப்பதை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியினர் நிறுத்தவில்லை.

இந்த நிலையில் ரஜினியை சந்திரபாபு நாயுடு போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது இந்த விமர்சனங்கள் குறித்து பேச்சு எழுந்தது. விமர்சனங்கள் பற்றி எதுவும் நினைக்க வேண்டாம் என சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த ரஜினி, "அப்படி எதுவும் நான் நினைக்கவில்லை. விமர்சனங்கள் பற்றி சிந்திக்கவே இல்லை.

யார் என்ன கூறினாலும் உங்கள் மீதுள்ள மரியாதை என்றும் மாறாது" என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News