இந்தியா
null

இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

Published On 2023-11-14 05:08 GMT   |   Update On 2023-11-14 05:09 GMT
  • டிரோன்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி பறந்தது இது 3-வது முறையாகும்.
  • ஒரு டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது ஆகும்.

பெரோஸ்பூர்:

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் திண்டிவாலா கிராம பகுதியில் இந்திய எல்லைக்குள் ஆளில்லா டிரோன் பறந்தது. இதை பார்த்த எல்லைப்பாதுகாப்பு படைவீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தி செயல் இழக்க செய்தனர்.

விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து போதை பொருட்கள் கடத்தல் கும்பல் இந்த டிரோனை அனுப்பி வைத்திருந்தது தெரியவந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டிரோன்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி பறந்தது இது 3-வது முறையாகும். இதில் ஒரு டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது ஆகும்.

Tags:    

Similar News