இந்தியா

பஞ்சாப் எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

Published On 2023-02-03 07:05 GMT   |   Update On 2023-02-03 07:05 GMT
  • சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை இன்று காலையில் எல்லை பகுதியில் இருந்து படை வீரர்கள் கைப்பற்றினர்.
  • டிரோன் சட்டத்திற்கு மாறாக எல்லை பகுதியில் பறந்ததால் சுடப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆள் இல்லாத அந்த 'டிரோன்' பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள காக்கர் என்ற இடத்தில் இன்று அதிகாலை இறங்கிய போது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டனர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை இன்று காலையில் எல்லை பகுதியில் இருந்து படை வீரர்கள் கைப்பற்றினர். அந்த டிரோன் சட்டத்திற்கு மாறாக எல்லை பகுதியில் பறந்ததால் சுடப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் அதனை பறிமுதல் செய்து எதற்காக அவை அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News