இந்தியா
ஜார்க்கண்டில் மின்னல் தாக்கி இருவர் பலி- இழப்பீடு அறிவிப்பு
- சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக மேதினிராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
- பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.
ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலியான பல்ராம் யாதவ் (56), மன்மதி தேவி (45) ஆகியோர் வயலில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, இடி தாக்கியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக மேதினிராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று துணை ஆணையர் ஆஞ்சநேயுலு டோடே தெரிவித்தார்.