இந்தியா

பரிசு பைகளை பெற்று பெண்கள் நடந்து சென்ற காட்சி.

ஆந்திராவில் வாக்காளர்களை கவர 5 ஆயிரம் பணத்துடன் 'பரிசு பை' வினியோகம்

Published On 2024-03-14 04:28 GMT   |   Update On 2024-03-14 04:28 GMT
  • அரசியல் கட்சியினர் ஆண் வாக்காளர்களுக்கு மது பாட்டில், சிகரெட் உள்ளிட்டவை அடங்கிய கிப்ட் பாக்ஸ்களை வழங்கி வருகின்றன.
  • பெண் வேட்பாளர்களை கவர்வதற்காக மட்டன் பிரியாணி, இலவச சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பதி:

ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளுங்கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் என தேர்தல் பிரசார வியூகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்து இருந்தார்.

அரசியல் கட்சியினர் ஆண் வாக்காளர்களுக்கு மது பாட்டில், சிகரெட் உள்ளிட்டவை அடங்கிய கிப்ட் பாக்ஸ்களை வழங்கி வருகின்றன. பெண் வேட்பாளர்களை கவர்வதற்காக மட்டன் பிரியாணி, இலவச சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் வழங்கப்படுவதால் பரிசு பொருட்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் பிரகாசம் மாவட்டம், கனிகிரி நகராட்சி மண்டலத்தில் தன்னார்வலராக 500 பேர் வேலை செய்து வருகின்றனர். நேற்று தன்னார்வலர்கள் 500 பேரையும் பொது இடத்திற்கு வரவழைத்தனர்.

தன்னார்வலர்களுக்கு பரிசு பை ஒன்று வழங்கினர். ஜெகன்மோகன் ரெட்டி உருவபடம் பொறிக்கப்பட்ட அந்த பையில் ரூ.5 ஆயிரம் பணம், ஹாட் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் மற்றும் டின்னர் செட் உள்ளிட்டவை இருந்தன.

திடீர் அதிர்ஷ்டமாக பணத்துடன் பரிசு பொருட்கள் கிடைத்ததால் தன்னார்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் பையை பெற்றுச் சென்றனர்.

இதே போல் மற்ற கட்சியினரும் வேட்பாளர்களை வெகுவாக கவரும் வகையில் என்னென்ன பரிசு பொருட்களை வழங்கலாம் என ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆந்திராவில் உள்ள வாக்காளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags:    

Similar News