இந்தியா

ஜெகன்மோகன் ரெட்டி வாகனம் மீது செருப்பு வீச்சு

Published On 2024-03-31 10:47 IST   |   Update On 2024-03-31 10:47:00 IST
  • பா.ஜ.க., ஜனசேனா காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியினர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பதி:

ஆந்திராவில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பஸ்சில் யாத்திரையாக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று ஆந்திர மாநிலம் அனந்தபூர் அடுத்த குட்டி பஸ் நிலையத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஈடுபட்டு இருந்தார். ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ் நிலையத்தில் கூடி இருந்தனர்.

ஜெகன்மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பரபரப்பாக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் செருப்பை வீசினார். அந்தரத்தில் பறந்து வந்த செருப்பு ஜெகன்மோகன் ரெட்டியை தாண்டி சென்று விழுந்தது.

இதனைக் கண்டு ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியினர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகன்மோகன் ரெட்டியை நோக்கி செருப்பு வீசியவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை நோக்கி மர்ம நபர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News