இந்தியா

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் சந்திப்பு!

Published On 2025-04-19 11:49 IST   |   Update On 2025-04-19 11:49:00 IST
  • நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாகச் செயல்படுவதாக தெரிவித்தார்.
  • உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டதற்கு, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்காத பட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்திருந்தனர்.

இந்த தீர்ப்பு குறித்து பேசிய ஜெகதீப் தன்கர், நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியதுடன், ஜனாதிபதிக்கு நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.

ஆளுநர், ஜனாதிபதி அதிகாரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது இவர்களின் சாந்திப்பு நிகழ்ந்துள்ளது.

Tags:    

Similar News