இந்தியா

ஷிண்டே அரசு 3 மாதத்தில் கவிழும்: சஞ்சய் ராவத்

Published On 2023-05-13 03:57 GMT   |   Update On 2023-05-13 03:57 GMT
  • கவர்னர் மற்றும் சபாநாயகரின் முடிவுகள் சட்டவிரோதம்.
  • இன்னும் 3 மாதத்தில் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும்.

நாசிக் :

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று நாசிக்கில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கவர்னர் மற்றும் சபாநாயகரின் முடிவுகள் சட்டவிரோதம்.

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் இன்றி அவரது அணியை சேர்ந்த மற்ற 24 எம்.எல்.ஏ.க்களும் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள்.

இன்னும் 3 மாதத்தில் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும். 3 மாதத்தில் ஏக்நாத் ஷிண்டே அரசு கவிழும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News