இந்தியா

தீர்ப்பு குறித்து குலாம் நபி ஆசாத், உமர் அப்துல்லா சொல்வது என்ன?

Published On 2023-12-11 07:33 GMT   |   Update On 2023-12-11 07:33 GMT
  • உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கவலை அளிக்கிறது- குலாம் நபி ஆசாத்
  • இந்த தீர்ப்பு ஏமாற்றம்தான். ஆனால், மனம் தளரவில்லை- உமர் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்புரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அடுத்தாண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும். லடாக்கை யூனியன் பிரதேசமாக பிரித்தது செல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் கூறுகையில் "உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கவலை அளிக்கிறது. துரதிருஷ்டவசமானது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் இந்த தீர்ப்பா் மகிழ்ச்சியடையவில்லை." என்றார்.

உமர் அப்துல்லா கூறியதாவது:-

இந்த நிலையை அடைய பா.ஜனதாவுக்கு தசாப்தங்கள் எடுத்துக் கொண்டுள்ளது. நாங்கள் நீண்ட காலத்திற்காக தயாராகியுள்ளோம். இந்த தீர்ப்பு ஏமாற்றம்தான். ஆனால், மனம் தளரவில்லை. தொடர்ந்து போராடுவோம்.

இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.

Tags:    

Similar News