இந்தியா

குஜராத் கோவிலில் ரோப்கார் அறுந்து விழுந்து விபத்து- 6 பேர் உயிரிழப்பு

Published On 2025-09-06 20:13 IST   |   Update On 2025-09-06 20:13:00 IST
  • சரக்குப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 6 பேர் ரோப் காரில் பயணித்துள்ளனர்.
  • தொழிலாளர்கள் மற்றும் லிப்ட்மேன்கள் உட்பட 6 பேர் இறந்தனர்.

குஜராத் மாநிலம், பஞ்ச்மகாலில் பவகவ் மலையில் உள்ள ரோப் கார் அறுந்து கீழே விழுந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பஞ்ச்மகாலில் பவகவ் பாவகத் மலை மீது உள்ள கோயிலுக்கு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சரக்குப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 6 பேர் ரோப் காரில் பயணித்துள்ளனர்.

அப்போது, திடீரென கயிறு அறுந்ததில் ரோப்கார் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், தொழிலாளர்கள் மற்றும் லிப்ட்மேன்கள் உட்பட 6 பேர் இறந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டுக்குழு 6 பேரின் உடல்களை மீட்டனர்.

பஞ்சமஹால் கலெக்டர் இரண்டு லிப்ட்மேன்கள், இரண்டு தொழிலாளர்கள் மற்றும் இரண்டு பேர் உட்பட ஆறு பேர் இறந்ததை உறுதிப்படுத்தினார்.

விபத்து குறித்து நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Tags:    

Similar News