இந்தியா

கேதார்நாத் கோவிலில் பக்தர்களுக்கு தேநீர் வழங்கிய ராகுல் காந்தி

Published On 2023-11-06 15:21 IST   |   Update On 2023-11-06 15:21:00 IST
  • பிரபலமான தலைவர் பொதுமக்களுடன் பழகுவதைக் கண்டு பக்தர்கள் வியந்தனர்.
  • ராகுல் காந்தியின் கோவில் வருகையின் போது எடுத்த படங்களை காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது 3 நாள் பயணத்தை தொடங்கினார். பயணத்தின் போது கேதார்நாத் கோவிலில் பிரார்த்தனை செய்தும் ஆரத்தியில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

பின்பு, மலைக்கோவிலில் பிரார்த்தனை செய்ய தங்கள் முறைக்காக காத்திருக்கும் யாத்ரீகர்களுக்கு தேநீர் வழங்கி 'சாய் சேவா' செய்து கொண்டிருந்தார்.

இவ்வளவு பிரபலமான தலைவர் பொதுமக்களுடன் பழகுவதைக் கண்டு வியந்த பக்தர்கள், அவரிடம் செல்ஃபி எடுக்கக் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ராகுல் காந்தி நிராகரிக்கவில்லை.

ராகுல் காந்தியின் கோவில் வருகையின் போது எடுத்த படங்களை காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News