இந்தியா

ம.பி.-யில் காங்கிரஸ் அரசை பணம் கொடுத்து கலைத்தது பா.ஜ.க. - ராகுல் காந்தி

Published On 2023-11-10 12:54 GMT   |   Update On 2023-11-10 12:54 GMT
  • இதன் காரணமாக உள்ளூர் பொருளாதாரம் வலுப்பெறும்.
  • சட்டமன்ற உறுப்பினர்கள், சிந்தியா பா.ஜ.க. கட்சியில் இணைந்தனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான ஆட்சியை பண பலத்தால் பா.ஜ.க. கலைத்தது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். 2018 சட்டசபை தேர்தலுக்கு பின் ஆட்சியமைத்த காங்கிரஸ் கட்சியின் முதல்வராக கமல் நாத் தேர்வு செய்யப்பட்டார்.

பிறகு 2020 மார்ச் மாதம் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவான பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சியை கவிழ்க்க காரணமாக செயல்பட்டனர். இதன் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக பதவியேற்றார். பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிந்தியா ஆகியோர் பா.ஜ.க. கட்சியில் இணைந்தனர்.

மத்திய பிரதேச மாநிலத்தின் ராய்பூரை அடுத்த பார்வானியில் நடைபெற்ற பிராசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, "கடந்த சட்டசபை தேர்தலின் போது, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தோம். அதன்படி 25 லட்சம் விவசாயிகள் பெற்றிருந்த கடன்களை தள்ளுபடி செய்தோம்."

"ஆனால் பா.ஜ.க. மற்றும் அதன் தொழிலதிபர்கள் அடங்கிய சகாக்கள் உங்களது அரசாங்கத்தை சட்டசபை உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து திருடி விட்டது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கைகளில் பணம் கிடைத்தால், அவர்கள் அதனை கிராமங்கள் மற்றும் நகரங்களில் செலவிடுவர். இதன் காரணமாக உள்ளூர் பொருளாதாரம் வலுப்பெறும். இதே நிலை சத்தீஸ்கரில் வெற்றிகரமாக எட்டப்பட்டது," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News