ராகுல் காந்தி வாகனத்தின் முன் தவறி விழுந்து போலீஸ் கான்ஸ்டபிள் காயம் - வீடியோ
- 16 நாட்கள் நடக்கும் இந்த பயணம் வரும் செப்டம்பர் 1 அன்று பாட்னா காந்தி மைதானத்தில் முடிவடையும்.
- அந்த கான்ஸ்டபிள் அதை மறுத்துவிட்டு வலியுடன் நடத்த வீடியோ வைரலாகி வருகிறது.
வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை எதிர்த்து பீகாரில் கடந்த 17 ஆம் தேதி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் தொடங்கினார். 16 நாட்கள் நடக்கும் இந்த பயணம் வரும் செப்டம்பர் 1 அன்று பாட்னா காந்தி மைதானத்தில் முடிவடையும்.
இந்நிலையில் நேற்று ராகுல் திறந்த வெளி ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது, அவரது வாகனம் பாதுகாப்புக்காக வந்திருந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தவறி ஜீப் முன் விழுந்தார். அவர் மீது ஜீப் ஏறி இறங்கியது.
உடனடியாக, போலீஸ் அதிகாரிகளும் காங்கிரஸ் தொண்டர்களும் வாகனத்தை பின்னுக்குத் தள்ளி காயமடைந்த கான்ஸ்டபிளைக் காப்பாற்றினர்.
ராகுல் காந்தி தண்ணீர் வழங்கி காயமடைந்த கான்ஸ்டபிளை ஆசுவாசப் படுத்தினார். தனது ஜீப்பில் வந்து அமருமாறு அவரை கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த கான்ஸ்டபிள் அதை மறுத்துவிட்டு வலியுடன் நடத்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தின் வீடியோவை பகிர்ந்து பாஜக ராகுலை விமர்சித்துள்ளது.