இந்தியா
5 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார் பூடான் பிரதமர்
- ஐந்து நாள் பயணமாக பூடான் பிரதமர் இன்று இந்தியா வந்துள்ளார்.
- ஷேரிங் டோப்கே ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்துப் பேசுகிறார்.
புதுடெல்லி:
பூடான் பிரதமராக கடந்த ஜனவரி மாதம் ஷேரிங் டோப்கே பதவியேற்றார்.
இந்நிலையில், தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக ஷேரிங் டோப்கே இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். அவரை மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே வரவேற்றார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை பூடான் பிரதமர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தனது பயணத்தில் டோப்கே மும்பைக்கும் செல்கிறார்.
பூடான் பிரதமராக பதவியேற்ற ஷேரிங் டோப்கேவின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.